Thursday, June 15, 2006

இரு கோடுகள்

இது பாலசந்தர் படம் அல்ல,...நடைமுறைத் தத்துவம்..

இப்போதய மத்திய அரசில், அக்பர் அவையில் இருந்த பீர்பால் போன்ற மதி நுட்பம் மிகுந்த,
மந்திரிகள் இருக்க வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாதது என்று மத்திய அரசு ஒரு புறம் அறிவித்துக் கொண்டு இருக்கிறது.. மறு புறம், இடதுசாரி கட்சிகள் தத்தமது மாநிலங்களிலும், டெல்லியிலும் விலை உயர்வை கண்டித்து, போராட்டம் நடத்துகின்றன. காங்கிரஸ் ஆளும், மாநிலங்களிலோ, விற்பனை வரியை கட்டுப்படுத்தி, ஒரு ரூபாய் வரை பெட்ரோல் பொருட்கள் விலை குறைக்கப் பட்டுள்ளது..

கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், பத்து தினங்களுக்கு முன்பு வரை, பரபரப்பாக பேசப்பட்ட, போராடப்பட்ட, இட ஒதுகீட்டுப் பிரச்சனை, இப்போது, எல்லோராலும், மறக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட ,விஷயம் ஆகி விட்டது..

இப்போது பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனயை சமாளிக்க, இன்னொரு பெரிய கோடு போடத் தெரியாதா என்ன, நம் ஆட்சியாளர்களுக்கு ?

வாழ்க ஜனனாயகம் !!

0 Comments:

Post a Comment

<< Home