Monday, October 09, 2006

தேர்தலிசை...

நிஜமும் இசையும்...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்...
டீவி எதற்காக கொடுத்தான்...
உதவிடவா கொடுத்தான்..இல்லை..
தேர்தல் நினைத்துக் கொடுத்தான்...
உதவிடவா கொடுத்தான்..இல்லை..
தேர்தல் நினைத்துக் கொடுத்தான்...

கூட்டணியில் கொடுத்த இடம்,
குறைவு என்று மீண்டும் கேட்டான்...
கேட்ட இடம் கிடைக்க வில்லை...
கூட்டணியை மாற்றி விட்டான்...

உனக்காகவென்றோ.. எனக்காகவென்றோ..
ஒரு போதும், (அரசியல்) தலைவன் இருந்ததில்லை... (கொடுதத..)

மதுரையிலே தேர்தலப்பா..கட்சிகளின் பிரச்சார இறைச்சலப்பா...
அனைவருமே பணம் கொடுக்க..அடிதடி தான் நடக்குதப்பா...

உனக்காகவென்றோ.. எனக்காகவென்றோ..
ஜெயிப்பவன் ஒன்றும் செய்யப் போவதில்லை.. (கொடுதத..)

********** ******* ************** *********
பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
கூட்டணியில் நிலைப்பேனடி...
பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
மக்கள் நம்ம பக்கமடி.. ( பொய் )


சிக்குன் குனியா வந்து பல மக்கள் இங்கே இறந்ததார் என்று சொல்வதை நம்பாதடி...
இரண்டு ஏக்கர் நிலமதை எல்லோருக்கும் கொடுப்பேன்..என்னை நம்பி ஓட்டுப் போடடி. (சிக்குன்)

ஜாதிய அரசியல ...
நம்பி நான் கூட்டணி வைத்ததில்லை...
தேர்தல் முடிந்த பின்னே..
நான் யாரையும் ஒதுக்கவில்லை...
ஜெயித்த பின்னே தொகுதிப் பக்கம்
தினமும் வராமல் இருப்பதில்லை....(என்று..)

பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
கூட்டணியில் நிலைப்பேனடி...
பொய் சொல்லப் போறேன் , பொய் சொல்லப் போறேன்
என்னை நம்பி ஓட்டுப் போடடி..

************************************************************

0 Comments:

Post a Comment

<< Home