Wednesday, February 22, 2006

இந்த நாள் இனிய நாள்!

என் காதோரம் நரைச்சிருச்சு
கடமை ஒன்னும் தெரிஞ்ஞிருச்சு
தமிழில் இணையத்தில் எழுதும்
வழி ஒன்னும் புரிஞ்ஞிருச்சு....

நானாகத் தேடித் தேடி
வெகுவாக முயற்சி செய்தேன்
தானாக வரும் வரையில்
எனக்கு அது கிடைக்க வில்ல.

ராமனார் வில் வளைக்க
இத்தனை நாள் ஆக வில்ல
கம்பர் அதை கவி பாட
இத்தனை நாள் பிடிக்க வில்ல

எத்தனை நாள் ஆனாலும்
விரும்பியது கிடச்சதனால்
என் வரையில் நான் சொல்வேன்
இந்த நாள் இனிய நாள்