Sunday, August 31, 2008

கேளுங்கள் வேகுஜனமே...

மக்கள் பணி ?

எரிகின்ற தீயிலே எண்ணெய் ஊற்றப் போய்
கருகிவிட்ட கையினை கொண்ட கயவர்களை
கேட்பீர் வேகுஜனமே - இது தானா நீவிர் செய்யும் மக்கள் பணி ?

மம்தாவும் புத்தாவும் ரத்தினரின் வழி மறிக்க
ரத்தினரும் உத்திரத்தில் உந்தியை கொண்டு விட,
வங்காள பாட்டாளி வயிற்றுக்கு என்ன வழி-
கேட்பீர் வேகுஜனமே - இது தானா நீவிர் செய்யும் மக்கள் பணி ?

கேட்கின்றோம் தாத்தாவே, தமிழ் தொண்டின் நிறம் அறிய,
வசை பாடவும் வழி உண்டெனில், - கற்போம் தமிழ் இதற்கெனவே.
கேட்பீர் வேகுஜனமே -இது தானா நீவிர் செய்யும் மக்கள் பணி

கேள்வி கேட்கும் மானிடரே, கேட்டுவிட்டால் போதுமா.?
கேட்கின்ற வேகுஜனமே.. விடயதிங்கு நம் கையில்...
பெற்று விட்ட சுதந்திரத்தை, கொடி பறக்க விட்டு விட்டோம்;
விட்டு விட்ட ஒட்டுதலை ஒட்டவைத்து பங்கெடுக்க
இளைய சிங்க இளைஞர்களும் இணைந்து ஒரு முடிவெடுத்தால்..
கேளுங்கள் வேகுஜனமே, விடயதிங்கு நம் கையில்

-கார்த்திக் அய்யர்.