Saturday, May 27, 2006

யாருக்கு வேண்டும் இட ஒதுக்கீடு ?

திருத்தணி அருகே அமீர்பேட்டை கிராமத்தில் மண் பானை தயாரிக்கும் குடும்பத்தை சேர்ந்த சுசித்ரா, பிளஸ் 2 தேர்வில் 1071 மதிப்பெண்கள் பெற்று அரசு மேல் நிலைப்பள்ளியில் முதல் மாணவியாகத் திகழ்ந்த போதும், வசதியின்மை காரணமாக, மேற்கொண்டு கல்வியைத் தொடர முடியாமல் மண் பானை செய்யப் போகின்றார்...

இட ஒதுக்கீடு மட்டுமின்றி, இலவச கல்வியும் இப்படிப் பட்ட பிற்பட்டவர்களுக்கு கொடுக்கப் பட வேன்டும் ; அதல்லாம்மல், ஜாதீய அடிப்படையில் செய்யப்படும் இட ஒதுக்கீடு, எக்காலத்தும், இப்படிப்பட்ட தகுதியுள்ள , வசதியற்ற, மாணாக்கர்களுக்கு உதவப் போவது இல்லை.

ஒரு சீன பழமொழி ஒன்று உள்ளது... பசி என்று வருபவனுக்கு, மீனை கொடுக்காதே, மீன் பிடிக்க கற்றுக்கொடு.. நமது அரசாங்கமும், அரசியல்வாதிகளும், மீன் பிடிக்கக் கற்றுக்கொண்டு விட்டு, மக்களுக்கு , மீனை கொடுத்து ஏய்க்கின்றார்கள்..

" ஜாதிகள் இல்லையடி பாப்பா,
குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்,
நீதி உயர்ந்த மதி கல்வி,...."

அதை அனைவருக்கும் தருதல் அரசின் கடமையன்றோ...

இன்று ஆட்சி பீடத்தில் இருப்பவர்கள் கொடுக்கும் போலி வாக்குறுதிகளையும், குறுகிய கால நன்மையான, பதவியில் நிலைக்க வேண்டி, செய்யும், பிரிவினைகளையும், பொது மக்களாகிய நாம் நம்பாமல், பொதுவில் நினைத்து வழிச் செல்ல வேண்டும்.

இந்தி ஒழிப்பு, சுயாட்சி, என்று குமுறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, "ரெண்டு ரூபாயிக்கு ஒரு கிலோ அரிசி" என்றும், "வீட்டுக்கு ஒரு கலர் டீவீ " என்றும், சமயத்திற்க்கு தகுந்த மாதிரி, கூட்டணி மாற்றிக்கொண்டும், செய்யும் மலிவான வியாபார உத்திகள் தான் அரசியல் தந்திரம் என்று மக்கள் உணர வேண்டும்.

இந்தி ஒழிந்ததா, சுயாட்சி வந்ததா என்றால், இல்லை.. இவர்களின் கொள்கைகளை உண்மையாக நம்பி, அதன் வழி நடந்து, ஒரு குறுகிய வட்டத்துக்குள், வளர வழியின்றி, இருக்கும் அப்பாவி வாக்காளன் தான், உண்மையில் பின் தங்கிய (தங்கிப் போன) வகுப்பினன்.

இப்படி பிரிவினைகளை பலவிதமாக, வகுத்துவிட்டு, பின்பு, "சமத்துவம்", "சமத்துவபுரம்" என்றெல்லாம் பேசி வருவது வெறும் ஏமாத்து வேலையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்..

சமூகத்தில் பின் தங்கிய மக்களுக்கு உண்மையாக இந்த உதவி போய்ச் சேருகிறதா என்றால் இல்லை..வசதி நிறைந்த, பிறந்த ஜாதியின் காரணத்தினால் மட்டுமே " பின் தங்கிப் போன" பலர் இதனை மேற் படிப்பினுக்கு செல்லும், ஒரு எளிய வழியாக பார்க்கின்றார்கள்..கடின உழைப்பை கை விட்டு, ஒதுகீட்டினை மனதில் கொண்டு அதற்கேற்ற மாதிரி, மதிப்பெண்கள் பெறுகின்றார்கள்,.

ஒரு சோம்பேறி தலைமுறையை உருவாக்குகின்ற பெருமை, நமது அரசியல் வதிகளுக்கு போய்ச் சேரட்டும்..மதவாத அமைப்புக்களை, அரசியல் அமைப்புக்களாக மாற்றிய பெருமை இவர்களுக்கு போய்ச் சேரட்டும்..

படித்த இளைஞர்கள் பெரும் விவரம் அறியாத, எளிய, கிராமத்து மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள்..அவர்களுடய அறியாமை, அவர்களுக்கு மட்டுமின்றி, யாருக்குமே நன்மையைத் தரப் போவது இல்லை...

Saturday, May 13, 2006

ஒரு சின்ன கேள்வி..

முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட அதே மேடையில் 2 ரூபாய்க்கு அரிசி வழங்கும் திட்டம், கூட்டுறவு கடன் ரத்து, சத்துணவில் 2 முட்டை ஆகிய உத்தரவுகளில் கருணாநிதி கையெழுத்திட்டார்.

தேர்தல் பிரசாரத்தின்போது, "முதல்வராகப் பொறுப்பேற்றதும் என் முதல் கையெழுத்து ரூ.2க்கு ரேஷன் அரிசி வழங்கும் திட்டத்திற்கு தான்' என்று அறிவித்திருந்ததற்கு நேற்று செயல் வடிவம் கொடுத்தார்.

நன்று, வாழ்த்துக்கள். keep it up..

ஒரு சின்ன கேள்வி..

" ..... இந்த உத்தரவால் அரசுக்கு ஆறாயிரத்து 866 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதை அரசே ஏற்கும்....."
இவ்வாறு அறிவித்துவிட்டு முதல்வர் கருணாநிதி கையெழுத்திட்டார்.


"அரசே ஏற்கும்" என்றால் அது வேறு எந்த வகையிலும் மக்கள் தலையில் விழாது என்று உறுதி அளிப்பாரா முதல்வர்?